இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்,
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2 வரை, நாடு முழுதும்
விலைஉயர்வுக்கு எதிராக, பசிக்கொடுமைக்கு எதிராக
பிரச்சார இயக்கம் நடத்துகிறது.
மத்தியில் உள்ள அய்முகூ அரசு, தங்கள் கொள்கைகளின்
தோல்வியை மறைக்க பருவமழை பொய்த்து விட்டதை
காரணமாகக் காட்டுகிறது. காங்கிரஸ் ஆட்சிகள், காங்கிரஸ்
தலைமையிலான கூட்டணி ஆட்சிகள், இந்திய விவசாயம்
சரிந்து அழிந்து போவதை, ஏன் கடந்த 60 ஆண்டுகளாகப்
பார்த்துக் கொண்டிருந்தன? விவசாயத்தில் பொது முதலீட்டை
விரிவுபடுத்துவதை தடுத்தது இதே ஆட்சிகள்தானே?
இப்போதும், கருப்பு சந்தைக்காரர்களை, பதுக்கல்காரர்களை
எச்சரிக்கும் விவசாய அமைச்சர், விவசாயப் பொருட்களில்
முன்பேரம் நடத்துபவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல
வில்லையே? அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை
செயற்கையாக உயர்வதற்கு அதுதானே காரணம்?
இகக மாலெ தனது ஒருவார கால பிரச்சார இயக்கத்
தில் பின்வரும் கோரிக்கைகளை எழுப்புகிறது.
கிலோ ரூ.2 வீதம், மாதம் 50 கிலோ அரிசி அல்லது
கோதுமை வழங்க வேண்டும்!
எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்து
அத்தியாவசியப் பொருட்களையும், பொது விநியோ
கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்!
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான விவசாய
செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையத்தின்,
புறக்கணிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்த
வேண்டும்!
நிவாரண நடவடிக்கையாக மட்டும் இல்லாமல்,
குளங்கள் போன்ற கிராமப்புற உள்கட்டுமான
முன்னேற்றம் நோக்கி, தேசிய ஊரக வேலை உறுதித்
திட்ட வீச்சை பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும்!
விவசாயப் பொருட்களில் முன்பேர வர்த்தக
நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்!
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை, மக்கள் சார்பு
மான்யங்களுடன், மக்கள் அமைப்புகளின் ஆலோசனை
களுடன், மக்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து
துரிதமாக செயல்படுத்த வேண்டும்!

0 Responses to விலைஉயர்வுக்கு எதிராக பசிக்கொடுமைக்கு எதிராக இகக மாலெ பிரச்சார இயக்கம்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE