அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகத்தின் முதல்மாநில மாநாடு மதுரையில்செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. 14 மாவட்டங்களில் இருந்து
500க்கும் மேற்பட்ட பெண்கள்கலந்துகொண்டனர்.
தோழர்கள் மஞ்சு, அஜந்தா,ஜீதா ஆகியோர் நினைவால்பெயரிடப்பட்டிருந்த மாநாட்டுஅரங்கை நோக்கி பேரணிநடந்தது. இந்தப் பேரணியை,
அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகத்தின் அகில இந்திய தலைவர் தோழர் ஸ்ரீலதாசாமிநாதன் துவக்கி வைத்தார்.
விலை உயர்வுக்கு எதிராகவும்மத்திய மாநில அரசுகளின் முதலாளித்துவ, ஏகாதிபத்தியசார்புவளர்ச்சிப்பாதைக்குஎதிராகவும்முழக்கங்கள்எழுப்பப்பட்டன.
மாநாட்டில் தோழர் குப்பாபாய் கொடியேற்றினார். தோழர்தேவகி தலைமையில் 13 பேர்கொண்ட தலைமைக் குழு மாநாட்டுக்கு தலைமை தாங்கியது.

அகிலஇந்தியமுற்போக்குபெண்கள்கழகத்தின்அகிலஇந்தியபொதுச்செயலாளர்தோழர் மீனா திவாரி மாநாட்டைதுவக்கிவைத்து உரையாற்றினார். பெண்களே உலகமயத்தாக்குதல்களின் விளைவுகளை


பெருமளவில் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று கூறியதோழர் மீனாதிவாரி, தமிழகத்தில் அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகம் மிகப் பெரியபெண்கள் அமைப்பாக எழவேண்டும் என்றார்.
தோழர் தேன்மொழி மாநாட்டு அறிக்கையை முன்வைத்தார். அறிக்கை மீது மாநாட்டில்கலந்துகொண்ட பெண்கள் கருத்து தெரிவித்தனர். இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவசசமையல் எரிவாயு அடுப்புவழங்குவதாக சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, வேலையோ,செய்த வேலைக்கு கூலியோதருவதற்கான உத்தரவாதங்களை ஏற்படுத்தவில்லை என்றும், இதற்கெதிராக பெண்கள்போராடும்போது, துப்பாக்கிச்சூடும், தடியடியுமே பதிலாகஇருக்கிறது என்றும், இது போன்றநிலைமைகளுக்கு எதிராகபெண்கள் பெருமளவில் திரண்டுபோராட்டங்களை முன்னெடுக்க
வேண்டும்என்றும்,இந்தியஆட்சியாளர்களின்அமெரிக்கஅடிமைத்தனத்துக்கு எதிராகபெண்கள் போராட்டங்கள் வலுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வந்தன. இந்த விவாதங்கள் மீது தோழர் தேன்மொழிதொகுப்புரைவழங்கினார்.
அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகத்தின் அகிலஇந்திய தலைவர் தோழர் ஸ்ரீலதாசாமிநாதன், தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் ரூ.100க்குக்குறைவான கூலியை ஒருபோதும்
ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், அதற்காக தீவிரமாகப்போராட வேண்டும் என்றும்,தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில், வேலை அட்டைபெற்றுள்ள ஒவ்வொரு குடும்பமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்
உள்ளோர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு வழங்கப்படும் அனைத்து
நல்வாழ்வு திட்டங்களும், அவர்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், இவற்றை உறுதிசெய்ய அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் தீவிரமானபோராட்டங்கள் நடத்த வேண்டும்என்றும், தமிழ்நாட்டில் அகில
இந்திய முற்போக்கு பெண்கள்கழகம் மிகவும் வலுவான பெண்கள் அமைப்பாக எழ வேண்டும்என்றும் அழைப்பு விடுத்தார்.மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம்,மாநில நிலைக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய விவசாயதொழிலாளர் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளருமான தோழர்ஜானகிராமன், ஏஅய்சிசிடியுமாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் நிர்மலா ஆகியோர்வாழ்த்துரையாற்றினர்.
மாநாட்டில் 21 பேர்கொண்ட மாநிலப் பொதுக் குழுதேர்ந்தெடுக்கப்பட்டது.

தோழர்தேன்மொழி மாநிலத் தலைவராகவும், தோழர் உஷா மாநிலப்
பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தீக்கதிர் நாளேட்டில்17.08.2009 அன்று, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டின்) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத்,நோபல் பரிசு பெற்ற
திரு.அமர்த்யா சென்னுடன்ஒரு ‘தோழமை விவாதத்தில்’ ஈடுபட்ட கட்டுரைபிரசுரமாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியுடன், நாமும்ஒரு தோழமை விவாதத்தில்ஈடுபட வேண்டி உள்ளது.
விவாதத்தின் துவக்கத்திலேயே, அமர்த்யா சென்னுடன் தோழமை விவாதமஎப்படிச் சாத்தியம் என்றகேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அமர்த்யா சென்ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா?நில உடைமை மிச்ச சொச்சங்களை முழுமையாக ஒழிக்கக் குரல்கொடுக்கும் ஜனநாயகவாதியா? சுதந்திரமானஇடதுசாரி அரசியலின் ஆதரவாளரா? இந்தக் கேள்விகளுக்கு ஆமாம் என்ற பதில்இருந்தால் அவரோடு தோழமை விவாதம் சாத்தியம்.
பதில் இல்லை என்று இருந்தால் அவரோடு விவாதம்சாத்தியமே தவிர, தோழ
மை விவாதம் சாத்தியமேஅல்ல.
அமர்த்யா சென், வறுமை, கல்வியின்மை, பொதுசுகாதாரம் பற்றிக் கவலைப்படுபவர். அதனால் தோழமை விவாதம் என்றால், பில்கேட்சுடனும் இன்போசிஸ்நாராயண மூர்த்தியுடனும்கூட தோழமை விவாதத்தில்ஈடுபட வேண்டும். அமர்த்யாசென் தம்மை ஒரு இடதுசாரியாக, இடதுசாரி நண்பராகக் குறிப்பிட்டு விவாதத்தில் ஈடுபடுவதாய், அவரோடு தோழமை விவாதம்எனப் பிரகாஷ் காரத் சொல்வதை ஏற்றுக் கொண்டால்,
இடதுசாரி கட்சிகளுடன்சகஜ உறவு இருக்கும் நேரங்களில் எல்லாம் தம்மை ஓர்இயல்பான இடதுசாரி என்றுஅழைத்துக் கொள்ளும்கருணாநிதியுடன் கூடதோழமை விவாதம் நடத்தவேண்டியிருக்கும்.அமர்த்யா சென் ஏகாதிபத்திய உலகமயத்திற்குமனிதமுகம் கொடுக்கமுயற்சிப்பவர்களில் ஒருவர்.அடிபட்டு விழுபவர்களுக்குபாதுகாப்பு வலை பற்றிப்பேசுபவர்.
அந்த பாதுகாப்புவலையில் கிட்டத்தட்டகயிறே இருக்காது, ஓட்டைகள்தான் நிறைந்திருக்கும்எனத் தெரிந்திருந்தும், பாதுகாப்பு வலை பற்றி நிறையப்பேசுபவர்.முதலாளித்துவம் அடிமுதல் முடிவரை இரத்தம்தோய்ந்து பிறந்துஎழுந்துவளர்ந்து வரும் காலம்நெடுக, முதலாளித்துவத்தைஅதன் இன்றைய வளர்ச்சியான ஏகாதிபத்தியத்தைஅழகுபடுத்தும் முயற்சிகளில்ஈடுபட்ட பலர் வரிசையில்,இவரும் ஒருவர்.
இந்த அரியபணிக்காக நோபல் பரிசுபெற்றவர். இடது முன்னணிஅரசாங்கங்களின், வலதுசாரிஅதி விரைவு பயண மைல்கற்களான நந்திகிராம்,சிங்கூர் தொடர்பாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் இடதுசாரி எதிர்ப்பாளர்கள், மாபெரும் ஏகாதிபத்திய சதியின் அங்கம்என்றெல்லாம் முத்திரைகுத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர், அமர்த்யா சென்னிடம் தோழமை பாராட்டுகின்றனர். அதில் வியப்பேதுமில்லை என்பதைப் பின்னர்பார்ப்போம்.

முதலில், அமர்த்யாசென் - பிரகாஷ் காரத்விவாதத்தைக் காண்போம்.
அமர்த்யா சென், தாம் பலமுறை சொல்லியிருப்பதுபோல், இந்தியாவில் இடதுசாரிகள்,சமூக நீதி மற்றும்இதர மய்யமான பிரச்சனைகளில் கவனம் செலுத்து
வதை விட்டு விட்டு,இந்திய இறையாண்மைகுறித்து, இந்திய அமெரிக்கஅணு ஆற்றல் ஒப்பந்தம்ஆகியவற்றுக்கே அழுத்தம்வைக்கின்றனர் என லண்டனில் பேட்டி தந்தார். அது
பற்றித்தான் பிரகாஷ் காரத்பேசுகிறார்.அமர்த்யா சென் சொல்வதில், கல்வி, பசி, ஊட்டச்
சத்து ஆகிய பிரச்சனைகளில்,மேற்கு வங்கத்திலும் அகிலஇந்திய அளவிலும் கூடுதல்
கவனம் செலுத்துவோம்என பிரகாஷ் காரத் பதில்சொல்கிறார். விமர்சனம்இந்த விஷயத்தில் ஏற்கப்படுகிறது.
இது கூட, காலாகாலமாய், முதலாளித்துவ மனிதநேயம் போதிக்கும் உபதேசங்கள்.இடதுசாரி நிகழ்ச்சிநிரலான, நிலம், வேலை,கூலி, உழைப்பவர் அதிகாரம் ஆகிய பிரச்சனைகள்விவாதத்திற்குள் நுழையாதவை.
அமர்த்யா சென்னின்ஏகாதிபத்தியம் தொடர்பான பார்வையை பிரகாஷ்காரத்பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்:
அமர்த்யாசென், ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என்பது ஒரு கடந்தகாலப் பிரச்சனை எனக் கருதுகிறார். ஏகாதிபத்தியத்தால்இயக்கப்படும் உலகமயம்,தனது இருபெரும் ஆயுதங்களான, புதிய தாராளமயக்கொள்கைகள் மற்றும் இராணுவத் தலையீடு கொண்டுசெயல்படுவது, சமூக நீதிபோன்ற பிரச்சனைகளோடுதொடர்புடையதல்ல எனடாக்டர் சென் கருதுகிறார்.

அமர்த்யா சென்னின் அடிப்படைத் தவறுகள் பற்றிபிரகாஷ் காரத் சுட்டிக்காட்டுகிற விஷயங்கள் சரிதான். ஏகாதிபத்திய, பெருமுதலாளித்துவ சார்பு வளர்ச்சிப் பாதை, சமூகத்தில்வாழும் ஏகப்பெரும்பான்மை மக்களுக்கு நீதி மறுக்கும். ஏகாதிபத்திய விசுவாசமும், மக்களுக்கு நீதி மறுப்பதையும் பிரித்துப் பார்க்கமுடியாது. இரண்டுமே
எதிர்க்கப்பட வேண்டும்.
பிரகாஷ் காரத்,காங்கிரஸ் தலைமையிலானஅய்முகூ அரசாங்கத்துடன்,இந்திய -அமெரிக்க பாதுகாப்பு வரையறை ஒப்பந்தம்கையெழுத்தான ஜøன்2005லேயே மோதல் துவங்கிவிட்டது என்றும், அதுதர்க்கரீதியாக, இந்தியஅமெரிக்க அணு ஆற்றல்தொடர்பான வாக்கெடுப்பிற்குப் பின், ஆதரவைவிலக்கிக் கொள்ளும் முடிவுக்கு இட்டுச் சென்றது என்றும் குறிப்பிடுகிறார். தாம்ஆதரவு தந்த காலங்களில்,தாம் தந்தநிர்ப்பந்தத்தால்தான், மக்கள் விரோதநடவடிக்கைகளின் வேகம்மட்டுப்பட்டது என்றும்,ஆதிவாசிகளின் வன உரிமைகள் தொடர்பான சட்டம்,தேசிய ஊரக வேலைஉறுதிச் சட்டம் போன்றவைஎல்லாம், நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும்தாம் எடுத்த போராட்டங்களால்தான் நிறைவேறினஎன்றும் வாதாடுகிறார். ஆக
சமூக நீதி வகைப்பட்டமக்கள் பிரச்னைகளில் தாம்ஈடுபடவில்லை என்ற அமர்த்யா சென்னின் கருத் துக்கள் தவறானவை என்கிறார்.
இவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்பதுநல்லது. அமெரிக்காவுடனான போர்த்தந்திர உறவுஜøன் 2005லேயே வலுப்பெறத் துவங்கிவிட்டது.இந்திய - அமெரிக்க அணுஆற்றல் ஒப்பந்தம் கூடஓரிரவில் கையொப்பமிடப்படவில்லை. மன்மோகன்
அரசைத் தப்பிக்கவிட்டது,
அதுவும் ஆரம்பகட்டத்தில்கூடுதலான வாய்ப்புக்கள்இருந்தபோது தப்பிக்கவிட்டது, ஏகாதிபத்தியஎதிர்ப்புக்கான மிக முக்கியப் பிரச்சனையில் வாய்ப்புகை நழுவிய பிறகு, தாமதமாக எதிர்ப்பு தெரிவித்ததுதான் நாடாளுமன்ற இடதுசாரிகள் செய்த தவறு என்பதைத் தோழர் பிரகாஷ்காரத் காணத் தவறுகிறார்.விவாதமா, வாக்கெடுப்பா
என்பதில், விவாதம் எனத்தேர்வு செய்து, அய்முகூஅரசு ஆரம்ப கட்டத்தில்தப்பிக்க விட்டதை காணமறுக்கிறார். அமர்த்யா சென்னுடனான விவாதம் என்ற
விதத்தில், தோழர் பிரகாஷ்காரத், இந்திய அரசின்அமெரிக்க அடிவருடித்தன்மையை எதிர்ப்பதில்தமது கட்சியின் ஊசலாட்டத்தை, பலவீனமான சம்பிரதாய ஏகாதிபத்திய எதிர்ப்பை, மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

வேலை உறுதிச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்றவற்றில், நாடெங்கும் உள்ள மக்களுக்கும்,இடது முன்னணியில் அங்கம்வகிக்காத இடதுசாரி இயக்கங்களுக்கும், இகக, இகக(மா) போன்ற அனைவர்க்கும் பங்கு உண்டு. பிரகாஷ்காரத் சொல்வது சரிதான்.ஆனால், ஆளும்வர்க்கங்களும் அவர்களதுஅரசியல் கட்சிகளும் ஒடுக்குமுறைமூலம் மட்டுமேஆள முடியாது, சில சீர்திருத்த சலுகை நடவடிக்கைகளில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதை நாம்காணத் தவறக் கூடாது.இங்கேயும் கூட ஒரு முக்கியமான அரசியல் கேள்விஎழுகிறது. மக்கள் இந்த
சீர்திருத்தங்களை, உங்கள்நிர்ப்பந்தத்தால் விளைந்தவை எனக் கண்டார்களாஅல்லது சந்தேகத்தின் பயனை காங்கிரசுக்கு அளித்தனரா? ஓர் அரசியல் கட்சி
என்ற முறையில், இப்பிரச்சனையில் தோழர் பிரகாஷ்காரத் கவனம் செலுத்துவது
தான் நல்லது.

சிறப்புப் பொருளாதாரமண்டல சிற்பியான காங்கிரஸ் தப்பித்தது. நந்திகிராமில், சிங்கூரில் அமல்படுத்திய இடது முன்னணி அடிவாங்கியது. அவப்பெயர்கொண்டநடவடிக்கைகளுக்கு, இறுதி ஆராய்ச்சியில்,
நீங்கள் பொறுப்பானீர்கள்.
அரைமனதோடு மேற்கொண்ட அரைகுறை நல நடவடிக்கைகளுக்கு, வெற்றிகரமாககாங்கிரஸ் சொந்தம்கொண்டாடியது. இதுஉங்கள் வால் பிடிக்கும்அரசியல்வழிக்கு, நீங்கள்தந்த அரசியல் விலை எனக்கருத முடியாதா?
தோழர் பிரகாஷ் காரத்திடம் கேட்க வேண்டியவேறு கேள்விகளும் நமக்குஉண்டு. நீங்கள் தந்த நிர்ப்பந்தம், உங்கள் ஆதரவு இருந்த காலம், அப்போது நிறைவேற்றப்பட்ட நல நடவடிக்கைகள் மீது நீங்கள் சொந்தம் கொண்டாடுகிறீர்கள்.அய்முகூ அரசாங்கம் மேற்கொண்ட பெட்ரோல், டீசல்விலை உயர்வு, பொதுவானவிலைஉயர்வு, பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதை,ஆகியவற்றுக்கெல்லாம் யார்சொந்தம் கொண்டாடுவது?நீங்கள் நேரடியாக அல்லாதமுறையில் மத்திய அரசில்பங்கு பெறவில்லையா? உங்கள் கட்சிக்காரர்தானே சபாநாயகர்? உங்கள் கட்சியும்காங்கிரசும்மட்டும்தானேஒருங்கிணைப்புக்குழு வைத்திருந்தன? (மற்ற அய்முகூகூட்டாளிகளுடன் அல்லாமல் உங்களுடன் மட்டும்காங்கிரஸ் ஒருங்கிணைப்பு
கொண்டிருந்ததில் உங்களுக்கு இரகசியப் பெருமைவேறு இருந்தது).

இவை எல்லாவற்றையும் காட்டிலும் ஒரு மாபெரும் வரலாற்றுக் களங்கத்தை நீங்கள் சுமக்கிறீர்கள்.நீங்கள் ஆதரவளித்த காலத்தில்தான், சட்டவிரோதநடவடிக்கைகள் தடுப்புசட்டம், சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் 2005ஆகிய இருபெரும் மக்கள்விரோதச் சட்டங்கள், உங்கள் தரப்பில் இருந்து எந்தஎதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டன. இது பற்றிஇன்று வரை உங்கள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும், நாட்டு மக்களுக்கும்இடதுசாரி அணிகளுக்கும்
தரப்படவில்லை.
தோழர் பிரகாஷ் காரத்திற்கும் அமர்த்யா சென்னுக்கும் இடையிலான விவாதத்தின்மிக முக்கியமான பகுதியைக் காண்போம்: அமர்த்யா சென் இடதுசாரிகளுக்குப் பரிந்துரைக்கிறார்:
‘நீங்கள் காங்கிரசைஆதரியுங்கள். அல்லது காங்கிரசின் இடதுசாரிப் பிரி
வாகச் செயல்படுங்கள்.’தோழர் பிரகாஷ் காரத்இந்தப் பரிந்துரைக்கு என்னபதில் தந்துள்ளார்? சுதந்திரம்அடைந்து 60 ஆண்டுகள்ஆன பின்னரும், இந்தப்பாதை, எந்த விதத்திலும்மேற்கொள்ள முடியாதஒன்று என்பதையே, இடதுசாரிகளுக்கு அனுபவம்
கற்றுத் தந்துள்ளது.
அனுபவம் கற்றுத் தந்தது எப்போது? 2008இலா?2004இலா? 1998 இலா? 1996இலா? காங்கிரசை ஆதரியுங்கள், அல்லது அதன் இடதுசாரிப் பிரிவாகச் செயல்படுங்கள் என்ற ஆலோசனைஎந்த அரசியல் மதிப்பீட்டின்அடிப்படையில் வழங்கப்படுகிறது? இந்த மதிப்பீட்டிற்குவர நாடாளுமன்ற இடதுசாரிகளின் செயல் தந்திர வழிஎப்படி வாய்ப்பு தருகிறதுஎன்பதை அடுத்து சற்று விரி
வாகவே காண்போம்.

(அடுத்த இதழில் தொடரும்)

ஆகஸ்ட் 15, சுதந்திரதினத்தன்று அகில இந்தியமாணவர் கழகம் குமாரபாளையத்தில் ‘மாணவருக்கு, இளைஞருக்கு விடுதலை கிடைத்ததா?’ என்றதலைப்பில் சிறப்பு கூட்டம்
நடத்தியது. கூட்டத்திற்குஅய்சா மாவட்ட அமைப்பாளர் தோழர் முருகன்தலைமை தாங்கினார்.

தோழர் மலர்விழி அறிமுகவுரை நிகழ்த்தினார். அய்சாமேற்கு மண்டல அமைப்பாளர் கா.வெங்கடாசலம் சிறப்புரையாற்றினார். அய்சாவின் தேவை, ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி விளக்கினார். அய்சா முதல் மாநிலமாநாட்டிற்கு அனைவரும்கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
மாலெ கட்சி மாநிலக்குழுஉறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் நிறைவுரையாற்றினார்.

மாணவர் மத்தியில் எழுந்த கேள்விகளுக்கு தோழர்வெங்கடாசலம் பதிலளித்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள், நிர்வாகம் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தாண்டி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமாரபாளையம் அரசுஆண்கள் மற்றும் பெண்கள்பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்
பள்ளியில் இருந்தும் எஸ்எஸ்எம் அன்பு கலை அறிவியல்கல்லூரிகளில் இருந்தும்
கலந்து கொண்டனர்.

‘மாணவருக்கு,
இளைஞருக்கு
விடுதலை கிடைத்ததா?’
- வெங்கடாசலம்

‘கையூர் போராளிகள், நமது கட்சியின் பெயரால் தூக்கு மேடையைத் தழுவினார்கள்.’
- சாரு மஜøம்தார்

கையூர், தெலுங்கானா போன்ற புகழ்மிக்க விவசாயப் போராட்டங்களின்
உண்மையான வாரிசான மாலெ கட்சியின் 40ஆவது ஸ்தாபக ஆண்டை ஒட்டி,
தெலுங்கானா விவசாயப் போராட்ட வீர வரலாறு வெளியிடப்படுகிறது.

விடுதலை பெற்றஇந்தியாவின் ராணுவம் அய்தராபாத் மாகாணத்துக்குள் நுழைந்தபோது, அங்குநிசாம் ஆட்சியில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபல்வேறு பிரிவு மக்களும்,இந்திய ராணுவம் நிசாம்கொடுமைகளில் இருந்துதங்களை விடுவிக்க வந்துள்ளது என நினைத்து மகிழ்ச்சிஅடைந்தார்கள். கம்யூனிஸ்டுகளின் தலைமையில்,தெலுங்கானாவில், தீவிரமான நிலப் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தவர்களும், நிசாமை, அதன்ரசாக்கர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைகளில் உத்வேகம்பெற்றனர்.
அந்த உத்வேகத்துடன், நிலப்பிரபுத்துவஎதிர்ப்பு நடவடிக்கைகளைதீவிரப்படுத்தினர். மிகவும்கொடூரமான நிலப்பிரபுக்கள்அழித்தொழிக்கப்பட்டனர்.ரசாக்கர்களின் முகாம்கள்
அழிக்கப்பட்டன. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள்பறிக்கப்பட்டன. சுதந்திர
இந்தியாவுடன், அய்தராபாத்மாகாணம் இணைவதைதுரிதப்படுத்த, ‘தமது’ சுதந்திர இந்தியாவின், ‘தமது’ராணுவம் எடுத்த நடவடிக்கைகளுக்கு துணை புரிவதாகவே அவர்கள் கருதினர்.நேருவின் அரசாங்கத்தையோ, அதன் உள்ளூர் பிரதிநிதிகளையோ, எதிரிகள்என அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இந்திய ராணுவ ஆட்சிபொறுப்பேற்ற பதினைந்துநாட்களில், தெலுங்கானாப்போராளிகள், இந்திய ராணுவம் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை, எதிர்ப்பார்ப்பு எல்லாம் உடைந்துநொறுங்கிப் போனதைக்கண்டார்கள்.
ù த லு ங் க ô ன ôவிவசாயிகளின் வீரமிக்கப்போராட்டத்தை வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சிதலைமையில், இந்திய ராணுவம் பற்றிய மாயை பெரிதும்இல்லை என்றாலும், விவசாயிகளின் தீவிரமான போராட்டங்கள் கொந்தளித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், மய்யப்படுத்தப்பட்டவழிகாட்டுதலும், முறையான ஒருங்கிணைப்பும்
கிட்டத்தட்ட சாத்தியமற்றுப் போனது. நிசாம்சரணடைந்த பிறகு, இந்தியராணுவத்தின்தாக்குதல்,தெலுங்கானாப் போராளிகள் மீது திரும்பியது. விவ
சாய மக்களை கடுமையானஒடுக்குமுறைக்கு ஆளாக்கிவந்த நிலப்பிரபுக்கள் இந்திய
ராணுவத்தின் நண்பர்கள்ஆனார்கள்.இந்திய ராணுவம் வந்துசேர்வதற்கு முன்னரே,நிலப்பிரபுக்களின் வீடுகள்தரைமட்டமாக்கப்பட்டன.லட்சக்கணக்கான தானிய
மூட்டைகள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான
கால்நடைகள் பறிமுதல்செய்யப்பட்டன.தெலுங்கானாப் போராளிகளின் போராட்டத்தின்
முன் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிப்போன நிலப்பிரபகள் திரும்பி வந்தனர்.

ராணுவ முகாம்கள் அருகினில் காங்கிரஸ் கட்சியின்அலுவலகங்கள் அமைந்தன.
அந்த அலுவலகங்களில்மூவர்ணக் கொடிபறந்தது.காங்கிரஸ்காரர்கள்,நிலப்பிரபுக்களுடன் சேர்ந்துகொண்டு, நிசாம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், இப்போது மக்கள் ஆட்சி அமைந்துள்ளதாகவும், மக்கள்பறிமுதல் செய்த நிலங்களைதிருப்பித் தந்துவிட வேண்டுமெனவும், காங்கிரஸ் அரசு,அதை மீண்டும் மக்களுக்குபிரித்துத் தரும் எனவும்
பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.மாலெ கட்சி தலைமையில் போராட்டங்களில்உழைக்கும் மக்கள் திரளும்போது, அவர்களை குழப்ப,நக்சலைட்கள் என்று சொல்லி, ஆளும்வர்க்கத்தார்முதல், அதிகாரபூர்வ இடதுகள் வரை இன்று முயற்சிசெய்வது போல், அன்று கம்யூனிஸ்டுகள் நம்பத்தக்கவர்கள் இல்லை என்றும் அவர்கள் ரஷ்ய ஏஜெண்டுகள்என்றும் காங்கிரஸ்காரர்களும், நிலப்பிரபுக்களும்புரளி பரப்பினர்.அய்தராபாத் மாகாணத்தில் அமைந்த இந்தியராணுவ ஆட்சியின் கவர்னர்ஜெனரல் ஜே.என்.சவுத்ரி,கம்யூனிஸ்டுகள் சரணடையாவிட்டால் அவர்களைஅழித்துவிடுவேன் என்றுவெளிப்படையாக அறிவித்தார்.

கட்சி அமைப்பாளர்களும், கெரில்லாப் போராளிகளும், போராட்டப் பகுதிகள் எங்கும், தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கினர். இந்திய அரசின் உண்மை முகத்தைஅம்பலப்படுத்தினர்.காங்கிரஸ் குழுக்கள் நிலப்பிரபுக்களின் குழுக்களேஎன்றும், போராடிப் பெற்றநிலத்தை, கால்நடைகளை,தானியங்களை, திருப்பித்தரவேண்டியதில்லை என்றும், அவற்றுக்கு கிராம பஞ்சாயத்துக் குழுக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும்,சரணடைய வேண்டாம்என்றும் மக்களுக்கு துணிவு
தந்தனர்.

அந்த சமயத்தில், சூர்யாபேட்டை முழுவதும்,ஓ உழவனேஎன்ன யோசனை?
சமரசம் பற்றியா?பூனை ஒரு பக்கம்எலி ஒரு பக்கம்இடையில் இடமுண்டோ
சமரசம் எதற்கும்?என்று கட்சி உறுப்பினர் ஒருவர் எழுதிய பாடல்ஒலித்துக் கொண்டிருந்தது.ராணுவத்தின் தாக்குதலும், தீவிரம் பெற்றது. கெரில்லாக்களை, மக்களைராணுவம் நேரடியாக தாக்கியது. 6000 பேர் கொண்டராணுவமும், போலீசும் ஒரேநேரத்தில், தேடுதல் வேட்டையில் இறங்கின. இந்தவேட்டைகள் பற்றி தலை
மறைவு கட்சி அமைப்புகளில் இருந்தும், கெரில்லாதலைமைகளில் இருந்தும்,வெளியான சில தகவல்கள்:1948 செப்டம்பர் முதல்டிசம்பர் வரை மட்டும்கொடிய சித்ரவதைக்குஆளானவர்கள் 6500 பேர்.சித்ரவதையால் உயிரிழந்தவர்கள் 60 பேர்.300 பெண்கள் பாலியல்வன்முறைக்காளானார்கள்.கட்சி உறுப்பினர்கள்,கெரில்லாக் குழு உறுப்பினர்கள் என 60 பேர்கொல்லப்பட்டனர்.

சாதாரண விவசாயிகள் 15பேர் கொல்லப்பட்டனர்.40 சதம் கட்சி உறுப்பினர்கள் பிடிபட்டனர்.இந்த சூழலில், மக்களின் மிகவும் அரசியல் படுத்தப்பட்ட பிரிவும், மிகவும்
மோசமாக ஒடுக்கப்பட்ட,சுரண்டப்பட்ட பிரிவும்,விவசாய சமூகத்தின் மிகவும்முன்னேறிய பிரிவும் மட்டுமே, இந்திய அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில்கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக நின்றனர். கம்யூனிஸ்ட்ஆதரவு அடித்தளம் கணிசமாகக் குறைந்தது. ஆயினும்,வல்லமைமிக்க ராணுவத்தையும் தெலுங்கானாப் போராளிகள் எதிர்கொண்டார்கள்.

கட்டமைக்கப்பட்டராணுவத்தின் ஆயுத பலத்தை எதிர்கொள்வதும் இப்போதுசிரமமானது. நல்கொண்டா, கம்மம், வாரங்கல் போன்ற சமவெளிப்பகுதிகளில் இருந்த போராளிகள், வேறுவழியின்றிவ ன ப் ப கு தி க ளு க் கு ம் ,கோயா, சென்சூரி, கோண்ட்போன்ற மலைவாழ் மக்கள்பகுதிகளான கிருஷ்ணாகோதாவரி மாவட்ட காடுகளுக்கும் சென்றனர்.

- தொடரும்

5 சட்டமன்ற தொகுதிஇடைத் தேர்தல்களில்,திமுக கூட்டணி அமோக
வெற்றி பெற்றுவிட்டது.இப்போதும் திமுக அரசு,மைனாரிட்டி அரசுதான்.தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள் என கழகக் கண்மணிகளுக்கு வெகுமதிகள்காத்திருக்கின்றன. முன்கூட்டியே தோல்வியைமுடிவு செய்துவிட்டதால்கொடநாடு போய்விட்டார்ஜெயலலிதா. எம்ஜிஆர்கட்டி வளர்த்த இயக்கம்கலைந்து காணாமல் போய்விடுமா என்று பத்திரிகைகள்செய்திக் கட்டுரைகள் வெளியிட்டன. அஇஅதிமுகவின்தேர்தல் புறக்கணிப்புக்குஅப்பால் 68 சதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

திமுக தலைவர்கள்எல்லாம் இடைத்தேர்தல்நடந்த தொகுதிகளில் முகாமிட்டு வாக்குப் பதிவைகவனித்துக் கொண்டிருந்தபோது, அஇஅதிமுகவின்வளர்மதியும் சேகர் பாபுவும்
சென்னையில் அஇஅதிமுகவின் மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் இருந்தார்கள்.திமுகஅரசை மைனாரிட்டிஅரசு என்று அழைப்பதை
ஜெயலலிதா நிறுத்தும் வரை,ஜெயலலிதாவை திருமதிஜெயலலிதாஎன்றுதான்அழைப்பேன் என்று கருணாநிதி சொன்னதைக் கண்டித்து, ஜெயலலிதாவை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பெண்ணினத்தையே கருணாநிதி சிறுமைப்படுத்திவிட்டார் என்றுகுரலெழுப்பிய அந்த ஆர்ப்பாட்டம் ஜெயலலிதாவின்தேர்தல் புறக்கணிப்பு உருவாக்கிய கேள்விகளை மட்டுப்படுத்திவிட முடியாது.கிட்டத்தட்ட அரசியல்துறவறம் பெற்றுக் கொண்டு
கொடநாட்டு பங்களாவில்தஞ்சம் புகுந்துவிட்ட ஜெயலலிதாவை அங்கிருந்தேபேசச் செய்தது கருணாநிதிதான். மைனாரிட்டி அரசைமைனாரிட்டி அரசு என்றுதான் அழைக்க முடியும்.

இது அரசியல் தளத்தில்எதிர்க்கட்சியின் விமர்சனம்என்றால், அதை அரசியல்ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். இது‘சிலை மாற்று’ அரசியல்நடத்தும் கருணாநிதிக்குநிச்சயம் தெரியும். ஆனால்,எதிர்ப்பவர் பெண் என்பதால், காலாகாலமாய்,
பெண்ணை அடக்க ஆணாதிக்க சமூகம் பயன்படுத்தும்ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.

ஜெயலலிதா எம்ஜிஆருக்கு எழுதிய கடிதம்,சோபன் பாபுவுடன் எடுத்தபுகைப்படம் எல்லாம்முரசொலியில் வெளியாகின்றன. பண்பாடு பற்றி மாய்ந்து மாய்ந்து பேசும் கருணாநிதிஎப்படி, இந்த வயது வந்தும்,கொஞ்சம் கூட, பொது
வெளியில் கூச்ச நாச்சம்,நாகரிகம் இல்லாமல் நடந்துகொள்கிறார்? மத்தியபிரதேச அரசு, திருமணதிட்டத்தில் பயன்பெற வந்தபெண்கள் மீது நடத்தியபரிசோதனைக்கும் இதற்கும்என்ன வித்தியாசம்?

ஆதிக்கத்திற்கான பலவழிகளில் மொழியும் ஒன்று.பயன்பாட்டில் உள்ள, நன்கறியப்பட்ட மொழிகள்கொஞ்சம் கொஞ்சமாகஆணாதிக்கத்தில் இருந்துவிடுபட்டு வருகின்றன. விடுபட்டே ஆகவேண்டும் என்பதை வளர்ந்து வரும் ஜனநாயகப் போராட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால்,அவை இன்னும் வெகுதூரம்செல்ல வேண்டியுள்ளது.

திருமணமான, திருமணமாகாத ஆண் ‘திரு’ என்றேஅழைக்கப்படுகிறார். திருமணமான பெண் ‘திருமதி’என்றும், திருமணமாகாதபெண் ‘செல்வி’ என்றும்அழைக்கப்படுகின்றனர்.
தாலி வேலிதான். வேலியைத் தாண்டினால்தான்வெளி, விடுதலை எனஎதையுமே பார்க்க முடியும்.
தாலியைப் போல், ‘திருமதி’என்பதும் திருமணமானபெண்ணின் அடையாளமாகி விடுகிறது. ஆங்கிலத்தில் ‘மிஸ்’ (ஙண்ள்ள்), ‘மிஸஸ்’(ஙழ்ள்) என்ற வேறுபாடுஇப்போது மறைந்துவிட்டது.
பெண்ணை திருமணமானாலும், இல்லாவிட்டாலும் எம்எஸ்’ (ஙள்) என்றேவிளிக்கிறார்கள். தமிழில்இப்படி வர இன்னும்காலமாகலாம். அதுவரை,
கருணாநிதிகளின் சிற்றின்பப் பகடிகளுக்கும் இடமிருக்கலாம்.
திருமணம் என்ற சொல்லே, அதை செய்து கொள்ளும் ஆணிடமும், பெண்ணிடமும் உடனடியாக ஒருவெட்க உணர்வை கொண்டு வருகிறது. மகிழ்ச்சிஏற்படலாம். ஏனென்றால்,வாழ்க்கையில் இன்ப, துன்பம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள, இறுதி வரை வரும்என நம்பப்படுகிற ஓர் உறவுவருகிறது. ஆனால், வெட்கம் ஏன் வர வேண்டும்?

ஏனென்றால், அந்த இருவரும் பாலியல் உறவு கொள்வார்கள். மொத்த சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டஏற்பாடு அது. இந்தஏற்பாட்டுக்கு அப்பாற்பட்டஎந்த பாலியல் உறவும்
இன்றைய சமூகத்தில் தவறுஎனக் கருதப்படுகிறது.பிறழ்வு என அறியப்பட்டபாலியல்உறவுகளுக்குக் கூடஇன்று சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

ஜெர்மேன் க்ரீயர் என்றபெண்ணியவாதி, ‘அ ஜ்ர்ம்ஹய்ய்ங்ங்க்ள் ஹ ம்ஹய் ஹள்ம்ன்ஸ்ரீட் ஹள் ஹ ச்ண்ள்ட்ய்ங்ங்க்ள் ஹ க்ஷண்ஸ்ரீஹ்ஸ்ரீப்ங்’ என்றார். ஒருமீனுக்கு ஒரு சைக்கிள் எந்தஅளவு அவசியமோ அந்தஅளவுதான் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் அவசியம்என்பது அவர் வாதம்.இன்று இது நடைமுறையாகி வருகிறது. குழந்தை திருமணம், 18 வயதில் திருமணம்,21 வயதில், 30 வயதில், 40வயதில் என எல்லாம்கடந்து திருமணம் தேவையில்லை என்ற போக்குபெண்களுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

சமூக உழைப்பில், எல்லா மட்டங்களிலும், சமூகவெளியில் எல்லா இடங்களிலும் முக்கியமான, மய்யமான இடத்தை பெண்கள்வகிக்கத் துவங்கிய பிறகு,காலாகாலமாக திருமணம்,குடும்பம் ஆகியவற்றை சுற்றிக் கட்டுப்பட்டுள்ளஆணாதிக்க சுவர்கள்தாக்கப்படுகின்றன. அந்தத்தாக்குதல்களில் ஒன்றுதான்திருமணம்தேவையில்லை
என்று சில பல பெண்கள்எடுக்கும் முடிவும். ஆனால்,திருமணம் தேவையில்லைஎன்று முடிவெடுக்கும்பெண்கள், பாலியல் உறவும்தேவையில்லை என்று முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லையே. அவர்கள் இதையும் சேர்த்துத்தான் முடிவெடுக்கவேண்டும் என்றுஎப்படி எதிர்பார்க்க முடியும்? ஏன் அப்படி எதிர்பார்க்க வேண்டும்? அப்படிஇருந்தால் அது மாபெரும்குற்றமா? அரசியல் வாழ்க்கைக்கு அடிப்படை தகுதியா? அது அவரவர் தனிப்பட்ட விசயம் அல்லவா?அதில் மூக்கை நுழைப்பது அநாகரிகம் அல்லவா?அப்படி இருந்து விட்டால்,அதை இழிவுபடுத்தப்பார்க்கிறது ஆணாதிக்கஅணுகுமுறை. திருமணம்தேவையில்லை என்று முடிவெடுக்கும் ஆண்களும்உண்டு. ஆனால், அவர்களிடம் இப்படி ஒரு பிரிக்க
முடியாத முடிவை எவரும்எதிர்பார்ப்பதில்லை. இருந்துவிட்டால் அதை இழிவுபடுத்துவதும் இல்லை.மு த ல ô ளி த் து வசமூகத்தில் குடும்பம் எப்படி
ஓர் ஏற்பாடோ, அதேபோலத்தான் திருமணமும்.

இந்த ஏற்பாடுகள் சிலஉரிமைகள், கடமைகள்ஆகியவை தொடர்பானவை. இந்த உரிமைகள், கடமைகள் குடும்பத்துக்கானவை, திருமணம் சார்ந்தவை என்று நிறுத்தும் வரைமுதலாளித்துவ சமூகம்எண்ணெய் போட்ட சக்கரம் போல் சுமுகமாய் சுற்றிக் கொண்டிருக்கும்.வெளியே வேலைக்குசெல்லாமல் வீட்டில்வேலை செய்யும் பெண்ணுக்கு ஊதியம் எப்படி கணக்கிடுவது என்று இப்போதுவிவாதம் துவங்கிவிட்டது.பெண்கள் வீட்டில் செய்யும்வேலை உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்வது என்ற மார்க்சிய பொருளில் இல்லாவிட்டாலும், விவாதம் வந்து
விட்டது. இந்த நேரத்தில்,காலத்துக்கு சற்றும் ஒவ்வாதஒரு கருத்தை வெளியிடுகிறார் கருணாநிதி.
இந்த விசயத்தில் மனோகராவில் இருந்து அவர் அறிவு வளரவேஇல்லைஎன்பதைத்தான்இது காட்டுகிறது.ஆனால், சமூகம்வளர்கிறது. ஜனநாயகப்போராட்டங்கள் வளர்கின்றன. அவற்றில் பெண்களின்பங்கு வளர்கிறது. அது
கருணாநிதிக்கு சொல்லும்:கசடு கசடுதான். மைனாரிட்டி அரசு, மைனாரிட்டிஅரசுதான்.’
மண்ணில் பாதி
􀂉

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE