ஆகஸ்ட் 15, சுதந்திரதினத்தன்று அகில இந்தியமாணவர் கழகம் குமாரபாளையத்தில் ‘மாணவருக்கு, இளைஞருக்கு விடுதலை கிடைத்ததா?’ என்றதலைப்பில் சிறப்பு கூட்டம்
நடத்தியது. கூட்டத்திற்குஅய்சா மாவட்ட அமைப்பாளர் தோழர் முருகன்தலைமை தாங்கினார்.
தோழர் மலர்விழி அறிமுகவுரை நிகழ்த்தினார். அய்சாமேற்கு மண்டல அமைப்பாளர் கா.வெங்கடாசலம் சிறப்புரையாற்றினார். அய்சாவின் தேவை, ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி விளக்கினார். அய்சா முதல் மாநிலமாநாட்டிற்கு அனைவரும்கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
மாலெ கட்சி மாநிலக்குழுஉறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் நிறைவுரையாற்றினார்.
மாணவர் மத்தியில் எழுந்த கேள்விகளுக்கு தோழர்வெங்கடாசலம் பதிலளித்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள், நிர்வாகம் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தாண்டி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமாரபாளையம் அரசுஆண்கள் மற்றும் பெண்கள்பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்
பள்ளியில் இருந்தும் எஸ்எஸ்எம் அன்பு கலை அறிவியல்கல்லூரிகளில் இருந்தும்
கலந்து கொண்டனர்.
‘மாணவருக்கு,
இளைஞருக்கு
விடுதலை கிடைத்ததா?’
- வெங்கடாசலம்
About Me
1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com
Followers
;
0 Responses to ‘மாணவருக்கு, இளைஞருக்கு விடுதலை கிடைத்ததா?’