நாமக்கல் மாவட்ட மாநாடு

Posted by orumaipadu mandram Sep 25, 2009

இகக மாலெ நாமக்கல் -
ஈரோடு மாவட்ட 4வது மாநாடு
குமாரபாளையத்தில் நடைபெற்
றது. இதில் 38 பிரதிநிதிகளும், 17
பார்வையாளர்களும் கலந்து
கொண்டனர். தோழர் கே.ஆர்.
குமாரசாமி கொடியேற்றினார்.
கே.ஆர்.குமாரசாமி, வெங்கடே
சன், மனோகரன், ஜாக்குலின்
மேரி, கலைச்செல்வி ஆகியோர்
கொண்ட தலைமைக்குழு
அமைக்கப்பட்டது. தியாகிகளு
க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலைந்து செல்லும் மாவட்
டக்குழு செயலாளர் தோழர்
என்.கே.நடராஜன் அறிக்கை
முன்வைத்தார். அறிக்கை மீது
18 பிரதிநிதிகள் விவாதித்தனர்.
15 பேர் கொண்ட மாவட்ட
கமிட்டி ஏகமனதாக தேர்வு
செய்யப்பட்டது. மாவட்ட கமிட்டி
செயலாளராக ஏ.கோவிந்தராஜ்
தேர்வு செய்யப்பட்டார். மாநிலப்
பார்வையாளர் தோழர் கு.பாரதி

சிறப்புரையாற்றினார். தோழர்கள்
என்.கே.நடராஜன், தேன்மொழி
ஆகியோர் புதிய மாவட்ட கமி
ட்டிக்கு வாழ்த்துக்கள் தெரி வித்
தனர். எம்.முருகன் தீர்மானங்கள்
வாசித்தார். முடிவில் தோழர்
பொன்.கதிரவன் நன்றியுரை
கூறினார்.
மக்களோடு நெருக்க மான
உறவு, தத்துவத்தை நடைமுறை
யோடு இணைத்தல், கட்சிக்குள்
விமர்சனம், சுயவிமர்சனம் என்ற
நடைமுறையை வளர்ப்பது,
கட்சி கிளைகளை, உள்ளூர்
கமிட்டிகளை பலப்படுத்துவது,
விசைத்தறியில் 500 உறுப்
பினர்கள் கொண்ட கிளைகள்
உருவாக்குவது, அடுத்த மாநாட்
டிற்குள் 10 உள்ளுர் கமிட்டிகள்
உருவாக்குவது, மாணவர், இளை
ஞர், பெண்கள் மத்தியில் இருந்து
தலைவர் குழாம் உருவாக்குவது
ஆகியவை பற்றி விவாதிக்
கப்பட்டது

0 Responses to நாமக்கல் மாவட்ட மாநாடு

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE